குலையா உறுதி, அசையாக் கொள்கை: பேராசிரியர் அன்பழகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!!

சென்னை: குலையா உறுதி, அசையாக் கொள்கை, தாழா மானம், மங்கா உணர்வு, மாறா நட்பு, மறையாப் புகழ் என இனி வரும் இயக்கத்து இளைஞர்களுக்கெல்லாம் எடுத்துக்காட்டாய் வாழ்ந்த இனமானப் பேராசிரியர் நினைவுநாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. காலம் முதல் பொதுக்குழுவில் என்னைக் கழகத் தலைவராக அறிவித்தது வரை என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் அவர் நிறைந்திருக்கிறார். என் நெஞ்சில் என்றும் நீங்காதிருப்பார்! அவர்தம் கொள்கைப் பெருவாழ்வு நம்மை வழிநடத்தும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post குலையா உறுதி, அசையாக் கொள்கை: பேராசிரியர் அன்பழகனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்..!! appeared first on Dinakaran.

Related Stories: