அமைச்சர் சிவசங்கர் வழங்கினார் அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு கூட்டம்

அரியலூர், மார்ச் 7: அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெறும் மனுக்கள் குறித்து உடனே விசாரித்து தீர்வுகாணப்படுகிறது. நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையில் குறைதீர்க்கும் மனு கூட்டம் நடைபெற்றது.

அதன்படி புதன் கிழமையான நேற்று அரியலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த 15 மனுதாரர்கள் தங்கள் குறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

The post அமைச்சர் சிவசங்கர் வழங்கினார் அரியலூர் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர் சிறப்பு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: