மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி

பரமத்திவேலூர், மார்ச் 7: பரமத்திவேலூர் உட்கோட்ட மின்வாரியத்தில் பணிபுரியும் 200க்கும் மேற்பட்ட மின் ஊழியர்களுக்கு, கோட்ட அளவிலான சேமநல பாதுகாப்பு பயிற்சி, பரமத்திவேலூரில் நடைபெற்றது. பரமத்திவேலூர் கோட்ட பொறியாளர் வரதராஜன் தலைமை வகித்தார். பயிற்சி வகுப்பில் ஊழியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள், மின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து, மேட்டூர் தொழில்நுட்ப உதவி செயற்பொறியாளர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசினார். இதில் பரமத்திவேலூர் கோட்டத்திற்கு உட்பட்ட உதவி செயற்பொறியாளர்கள் பரமத்திவேலூர் மூர்த்தி, கபிலர்மலை ராஜா, நல்லூர் ஜெகதீசன், மோகனூர் மாலதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: