ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மே 11: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் நேற்று மாவட்ட தலைவர் தண்டபானி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் தரமான பொருட்களாக பாக்கெட் செய்து வழங்க வேண்டும், ரேஷன் பொருட்களை இறக்குவதற்கு கட்டாய இறக்கு கூலி வசூலிப்பதை தடுக்க வேண்டும். ரேஷன் கடையில் பணிபுரியும் அனைத்து விற்பனையாளர், கட்டுனர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.

The post ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: