அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் கைவரிசை விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிய பிரபல கொள்ளையன் கைது: 12 சைக்கிள்கள் மீட்பு

சென்னை: அடுக்குமாடி குடியிருப்புகளை குறிவைத்து தொடர் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேடு, அரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள விலை உயர்ந்த சைக்கிள்கள் மாயமாகி வந்தது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் சிசிடிவி காட்சிகளை பெற்று சைக்கிள் திருடனை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையே சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, சூளைமேடு பகுதியை சேர்ந்த பழைய குற்றவாளியான சைக்கிள் திருடன் சதீஷ்(31) என தெரியவந்தது.

உடனே அவனை போலீசார் அதிரடியாக பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, பகல் நேரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளை நோட்டமிட்டு, இரவு நேரத்தில் சம்பந்தப்பட்ட குடியிருப்புகளில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. சதீஷ் திருடிய சைக்கிள்கள் அனைத்தும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள சைக்கிள்கள் என விசாரணையில் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அதிடியாக சைக்கிள் திருடன் சதீஷை கைது செய்தனர். அவனிடம் இருந்து 12 விலை உயர்ந்த சைக்கிள்கள் பறிமுதல் செய்தனர்.

The post அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர் கைவரிசை விலை உயர்ந்த சைக்கிள்களை திருடிய பிரபல கொள்ளையன் கைது: 12 சைக்கிள்கள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: