தாமரை சின்னத்தை பாஜவுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: தேசிய மலரான தாமரையை ஒரு அரசியல் கட்சிக்கு ஒதுக்கியது அநீதி எனவும், நாட்டின் ஒருமைப்பாட்டை இழிவுபடுத்துவது எனக் கூறி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அகிம்சை சோசலிச கட்சி நிறுவன தலைவரான டி.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து, பாஜவுக்கு தாமரை சின்னத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

The post தாமரை சின்னத்தை பாஜவுக்கு ஒதுக்கியதை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: