இதையடுத்து, 2023 நவம்பர் 16ம் தேதி ராஜுக்கு அந்த பெண்ணுடன் அதே பகுதியில் உள்ள ஒரு கோயிலில் குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடந்து போளூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ராஜுவின் மேல் முறையீடு மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இரு வீட்டாரின் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளதால் இந்த வழக்கில் மனுதாரருக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்படுகிறார். அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு அவரின் எதிர்கால முயற்சிகளுக்கு தகுதி இழப்பாக கருதப்படக் கூடாது என தீர்ப்பளித்தார்.
The post போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற மாணவனுக்கு மேல்முறையீட்டில் விடுதலை: உயர் நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு appeared first on Dinakaran.