இதையடுத்து தும்மாயி மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி பள்ளியில் சேர்ந்தார். காலை பள்ளிக்கு சென்று உணவை தயார் செய்து மாணவர்களுக்கு கொடுத்துவிட்டு, பின்னர் பயிற்சி பள்ளிக்கு சென்று படித்துவிட்டு மாலை வீடு திரும்புவார். கடந்த மார்ச் மாதம் யோகேஸ்வரி 10ம் வகுப்பு தேர்வு எழுதினார். மகளுடன் தனித்தேர்வராக தும்மாயியும் தேர்வு எழுதினார். நேற்று முன்தினம் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தும்மாயி 500க்கு 358 மதிப்பெண்களும், யோகேஸ்வரி 353 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றனர். தும்மாயி மகளைவிட 5 மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி நித்யா(42), மகன் சந்தோஷ் (17). சந்தோஷ் அதே கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தார். இதனால் சந்தோஷ் பள்ளி செல்லாமல் இருந்தார். மகனை தேர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பதற்காகவும், அரசு வேலை பெற பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நித்தியா வந்தவாசியில் உள்ள தனியார் கல்வி மையத்தில் தாய், மகன் இருவரும் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டனர். கடந்த மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் நித்யா 274 மதிப்பெண்களும், அவரது மகன் சந்தோஷ் 300 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர்.
The post ஒரே நேரத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர் மகளைவிட 5 மதிப்பெண் அதிகம் பெற்ற தாய் appeared first on Dinakaran.