படுக்கை அறை, வரவேற்பறையின் கதவை தாழிட்டு தவித்த குழந்தை

சென்னை: திருவொற்றியூர், ராஜாகடை வசந்தம் நகர், 3வது தெருவைச் சேர்ந்த தம்பதி பிலாலுதீன்-யாஸ்மின் பாத்திமா. இவர்களது 2 வயது குழந்தை விண்ணிரா (2). நேற்று மாலை, பிலாலுதீன் வேலைக்கு சென்றுள்ளார். யாஸ்மின் பாத்திமா வீட்டின் படுக்கையறையில் இருந்துள்ளார். வீட்டின் வரவேற்பறையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விண்ணிரா, எதிர்பாராதவிதமாக, தாய் இருந்த படுக்கை அறையின் கதவை வெளிபக்கமாகவும், வரவேற்பறையின் கதவை உள்பக்கமாகவும் தாழிட்டுள்ளார். பின்னர், திறக்க முடியாமல் அழுதுக் கொண்டிருந்தது. இதை அறிந்த தாய் யாஸ்மின் பாத்திமா, மொபைல் போன் மூலம், திருவொற்றியூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வரவேற்பரையின் உள்தாழ்ப்பாளை உடைத்து குழந்தையை பத்திரமாக மீட்டனர். பிறகு படுக்கை அறை வெளிபக்க கதவும் திறக்கப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post படுக்கை அறை, வரவேற்பறையின் கதவை தாழிட்டு தவித்த குழந்தை appeared first on Dinakaran.

Related Stories: