4 டாஸ்மாக் ஊழியர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை

சென்னை: கத்திவாக்கம் டாஸ்மாக் கடையில் திருவள்ளூரை சேர்ந்த குணசீலன் (50) மேற்பார்வையாளராகவும், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பிரபு (39), சுந்தர் (46), கிருஷ்ணமூர்த்தி (48) விற்பனையாளர்களாகவும் பணிபுரிந்தனர். இவர்கள் டாஸ்மாக் கடையில் 2009 முதல் 2012 வரை ரூ.30 லட்சத்து 15 ஆயிரத்தை கையாடல் செய்ததாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடந்தது. 4 பேர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தலா 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.30 லட்சத்து 15 ஆயிரத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும். கட்ட தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனை விதித்தும் மாஜிஸ்திரேட் ஸ்டாலின் தீர்ப்பளித்தார்.

The post 4 டாஸ்மாக் ஊழியர்களுக்கு தலா 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: