தொடர்ந்து மாணவரிடம் தண்ணீர் வாங்கி அருந்தினார். ஒரு மாணவர் தனது அறையில் அரசியல் தலைவர்களின் ஓவியம் வரைந்திருந்தார். அந்த மாணவரை உதயநிதி ஸ்டாலின் பாராட்டினார். பின்னர் மாணவர்கள் அமைச்சர் உதயநிதியுடன் நின்று செல்பி மற்றும் குழு புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்த ஆய்வின் போது அமைச்சர் முத்துசாமி, அரசு செயலாளர் தாரேஸ் அகமது, கலெக்டர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து இன்று கொடிசியா அரங்கில் நடைபெறும் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று மாலை திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார், பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
The post ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.