வேலூர் பெருமுகை அருகே தடுப்பு கம்பியில் பஸ் மோதி 8 பயணிகள் படுகாயம்

வேலூர்: வேலூரில் இருந்து ஆற்காட்டிற்கு இன்று காலை 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஆற்காடு நோக்கி சென்றது. வேலூர் அடுத்த பெருமுகை அருகே செல்லும்போது அவ்வழியாக ஒருவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றார். இதனால் பைக் மீது பஸ் மோதாமல் இருக்க டிரைவர் பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். இதில் பஸ் சாலையில் இருந்த தடுப்பு கம்பிகள் மீது மோதியது. இதில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் மற்றும் இருக்கையில் இருந்த பயணிகள் என 8 பேர் படுகாயம் அடைந்தனர்.  தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் யார், எந்த ஊரைச்சேர்ந்தவர்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வேலூர் பெருமுகை அருகே தடுப்பு கம்பியில் பஸ் மோதி 8 பயணிகள் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: