தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிககனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிககனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், 24-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள கோவை, திருப்பூர், திண்டுக்கல் தேனி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து நீலகிரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், கல்லகுறிச்சி, கடலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகபட்டினம், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே போல் 22-ம் தேதி(நாளை) மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தென்மாவட்டங்களான தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது தொடர்ந்து நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

23-ம் தேதி தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மிக கனமழைக்கும், திண்டுகல், மதுரை, தூத்துக்குடி ஆகிய 3 மாவடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

24-ம் தேதி தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்வதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிககனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: