நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் பாமக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்: அன்புமணி ராமதாஸ்

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் பாமக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். கூட்டணி குறித்து வரும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக வரும் அத்தனை செய்திகளும் வதந்திகளே. அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் வரை எதையும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

 

The post நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை ஓரிரு வாரத்தில் பாமக தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.

Related Stories: