நபே சிங் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாஜ ஆளும் அரியானாவில் இன்றைக்கு யாருக்குமே பாதுகாப்பு இல்லை. அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வர் பூபிநதர் சிங் ஹுடா தெரிவித்தார். இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவர் அபே சவுதாலா கூறுகையில், நபே சிங்கின் கொலைக்கு தார்மீக பொறுப்பேற்று அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார், உள்துறை அமைச்சர் அனில் விஜ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினார்.
The post அரியானாவில் லோக்தளம் தலைவர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.