இதனால் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியில் இருந்த வேறு ஒருவருக்கு போன் செய்து பார்த்து வருமாறு கூறியுள்ளார். அவர், அங்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. நீண்ட நேரம் தட்டியும் கதவு திறக்காததால் அவர் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது கணேசன், விமலா, தீபா மூன்று பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். முதற்கட்ட விசாரணையில் மூன்று பேரும் கேக்கில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். வீட்டை சோதனை செய்ததில் தீபா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், எனது சாவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதி இருந்ததாக தெரிகிறது. கடிதத்தின் அடிப்படையில் நடத்திய விசாரணையில் தீபா திருமணம் செய்த இடத்தில் ஏற்பட்ட பிரச்னையால் குடும்பமே தற்கொலை முடிவுக்கு வந்தததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.
The post திருமணமான மூன்றே மாதத்தில் பெற்றோருடன் புதுப்பெண் தற்கொலை appeared first on Dinakaran.