வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை: அரசுஎலைசா மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம். வெஸ் நைல் வைரஸ் காய்ச்சலால் மக்கள் பீதி அடைய வேண்டாம். காய்ச்சலுக்கான உரிய சிகிச்சையை மருத்துவ ஆலோசனையின்பேரில் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலினால் ஏற்படும் நீரிழப்பினை தவிர்த்திட போதியளவு நீர் மற்றும் திரவ உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீடுகளை சுற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்; நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுயமாக சிகிச்சை மேற்கொள்வதை தடுக்க வேண்டும்; வீடுகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் மனிதர்களிடம் இருந்து மற்ற மனிதர்களுக்கு பரவுவதில்லை.. மக்கள் பீதி அடைய வேண்டாம் : பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.
