இந்நிலையில் மீண்டும் விளையாடச் சென்ற சிறுவனை அதே திருநங்கைகள் ஏமாற்றி அழைத்துச் சென்று 4 மணி நேரம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டனர். இதையடுத்து சிறுவனின் தாய் அளித்த புகாரின்பேரில் காக்காபாளையம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகளான கார்த்திக்(எ) காயத்ரி (26), முல்லை (25) ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, திருநங்கைகளான காயத்ரி, முல்லை ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று மாலை தீர்ப்பு கூறினார். சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் திருநங்கைகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இதுவே முதன்முறையாகும். இவர்கள் இருவரையும் போலீசார் கோவை பெண்கள் சிறைக்கு கொண்டு சென்றனர்.
The post சிறுவனிடம் பாலியல் சீண்டல்: 2 திருநங்கைகளுக்கு ஆயுள்: தமிழ்நாட்டில் முதல்முறை appeared first on Dinakaran.