ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஒரு வாரத்தில் மீனவர்கள் கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இலங்கை கடற்படை கைது செய்த மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்ததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். படகுகளில் கருப்புக்கொடி கட்டி 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டு வந்தனர்.

The post ராமேஸ்வரம் மீனவர்கள் 3 நாட்களாக நடத்திவந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர் appeared first on Dinakaran.

Related Stories: