விழாவில், சிஎஸ்ஐஆர் மற்றும் செயலாளர் டிஎஸ்ஐஆர் தலைமை இயக்குனர் என்.கலைச்செல்வி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் BSACIST பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்டு டெக்னாலஜிஸ் அதிபர் குர்ரத் ஜமீலா, சார்பு அதிபர் அப்துல் காதர் ஏ.ரஹ்மான் புஹாரி, துணைவேந்தர் டி.முருகேசன், பதிவாளர் என்.ராஜா ஹூசைன் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்பட உயரதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சிஎஸ்ஐஆர் மற்றும் செயலாளர் டிஎஸ்ஐஆர். என். கலைச்செல்வி பேசுகையில், ‘‘பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்திற்கு பெயர் பெற்ற இந்தியா, அற்புதமான 21ம் நூற்றாண்டிற்கு தயாராக உள்ளது. ஒரு கல்வி நிறுவனம் பிஎஸ்ஏ கிரசண்ட் சமூகப் பொறுப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கிறது, இது ஒரு முக்கிய சக்தியாகும். இதை கொண்டு எதிர்காலத்தை ஒன்றாக வடிவமைப்போம்’’ என்றார்.
The post கிரசண்ட் கல்லூரி 13வது பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.