கூட்டணி தொடர்பாக 2 நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி

சென்னை: கூட்டணி தொடர்பாக 2 நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தகவல் தெரிவித்துள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், இந்த முறை கூட்டணி கட்சிகளில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் வெளிநாட்டு பயணத்தை முடித்து இன்று காலை சென்னை திரும்பிய கமல்ஹாசன் செய்ய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, கூட்டணி தொடர்பாக 2 நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன்.’thuglife’ படத்தின் முன்னேற்பாடு பணிகளுக்காக அமெரிக்க சென்று திரும்பியுள்ளேன். காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கும் தொகுதியில் போட்டியிடுகிறோமா என இப்போது சொல்ல முடியாது எனவும் அவர் கூறினார்.

The post கூட்டணி தொடர்பாக 2 நாட்களில் நல்ல செய்தியோடு சந்திக்கிறேன்: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: