குழுமிக்கரையில் இஸ்லாமிய அடக்கஸ்தலம் அமைக்கப்படும்

தில்லைநகர், பிப். 18: திருச்சி மேற்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் திருச்சி மேற்கு தொகுதி குழுமிக்கரை பகுதியில் அரசு உத்தரவின்பேரில் இஸ்லாமிய மக்களுக்கு தனி அடக்கஸ்தலம் அமைக்க வலியுறுத்தி நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் பைஸ் அகமது தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம், தமுமுக மாவட்ட செயலாளர் இப்ராஹிம் ஷா, தலைமை செயற்குழு உறுப்பினர் சபீர், மாநில துணை செயலாளர் முகமது ரபீக், மாவட்ட துணை செயலாளர் அசாருதீன், 29வது வார்டு தலைவர் கபீர், செயலாளர்கள் அப்துல் நாசர், காஜா, மாவட்ட அணி நிர்வாகிகள் தென்னூர் சதாம், உஸ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post குழுமிக்கரையில் இஸ்லாமிய அடக்கஸ்தலம் அமைக்கப்படும் appeared first on Dinakaran.

Related Stories: