பெண் மாயம்

 

திருச்சி. ஜூலை 22: திருச்சி புத்தூர் வி.என்.பி தெரு பகுதியை சேர்ந்தவர் இப்ராஹிம். இவரது மகள் ஷர்மிளா (19). இவர் திருச்சி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து மாலை வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதுகுறித்து அவரது தந்தை இப்ராஹிம் உறையூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மாயமான ஷர்மிளாவை தேடி வருகின்றனர்.

The post பெண் மாயம் appeared first on Dinakaran.

Related Stories: