ஜூலை 26ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம்

 

திருச்சி, ஜூலை 23: திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் ஜூலை 26 அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெறவுள்ளது.இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை சம்மந்தப்பட்ட கடனுதவிகள் மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் குறித்து நோிலோ, மனுக்கள் மூலமாகவோ தொிவிக்கலாம். மேலும் விவசாயப் பெருங்குடி மக்கள் இவ்வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தொிவித்துள்ளார்.

The post ஜூலை 26ல் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: