வண்ணாரப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 2 கேமராக்கள் திருட்டு

 

திருச்சி, ஜூலை 20: திருச்சி வண்ணாரப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.58ஆயிரம் மதிப்புள்ள 2வீடியோ கேமராக்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். திருச்சி வண்ணாரப்பேட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(50). இவர் 16ம் தேதி மாலை வீட்டை பூட்டி விட்டு உறையூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றார்.

அன்றிரவு வீட்டுக்கு வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 2 வீடியோ கேமராக்கள் உட்பட ரூ.58 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

The post வண்ணாரப்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 2 கேமராக்கள் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: