திருச்சி தேசிய கல்லூரியில் பொருளியல்துறையில் துவக்க நிகழ்ச்சி

 

திருச்சி, ஜூலை 27: திருச்சி தேசிய கல்லூரியில் முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பொருளியல்துறையில் துவக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.முதுநிலை 2ம் ஆண்டு மாணவி சந்தியா வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் குமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் டாக்டர் நூர்ஜகான் ஷர்புதீன் பொருளியல் மற்றும் நிதித்துறை, சவுதி மின்னணு பல்கலைக்கழகம், சவுதி அரேபியா, ‘‘உலகளாவிய பொருளாதார ஆபத்து மற்றும் ஏற்றுக்கொள்ளும் உலக சூழல்’’ என்னும் தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக மூன்றாம் ஆண்டு மாணவர் ஆதித் நன்றி கூறினார். துறை தலைவர் டாக்டர் ராஜேஷ் மற்றும் பேரவை துணை தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் டாக்டர் ஐனா, டாக்டர் தேவி மாரியம்மாள், டாக்டர் கீதா, டாக்டர் கயல்விழி, டாக்டர் ராஜேஷ், டாக்டர் சித்திரைராஜன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மாணவிகள் ரோகினி, நவீதாவாகினி தொகுத்து வழங்கினர்.

The post திருச்சி தேசிய கல்லூரியில் பொருளியல்துறையில் துவக்க நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: