இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சத்தி ஆனந்தன் மற்றும் 5 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சத்தி ஆனந்தனை போலீஸ் காவலில் எடுத்து நீதிமன்றம் அளித்ததை தொடர்ந்து, அவரிடம் ஒரு நாள் காவலில் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது, முதலீடாக பெறப்பட்ட தொகை, அந்த தொகையில் வாங்கி குவித்த சொத்துகள், இதன் பின்னணி, மூலிகை பொருட்களை கொடுத்து பல லட்சம் ரூபாய் வாங்கி மல்டி லெவல் முறையில் எப்படி அதிக தொகை தர முடியும் என போலீசார் தீவிரமாக விசாரித்தனர். நேற்று மதியம் விசாரணை முடிந்து சத்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
The post ரூ.20,000 கோடி மோசடி புகார் ‘மைவி3’ உரிமையாளரிடம் போலீஸ் காவலில் விசாரணை appeared first on Dinakaran.