தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்த பூண்டி மாதா பேராலயத்தில் இன்று காலை 6.15 மணிக்கு பேராலய அதிபர் சாம்சன் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள பேராலயம், தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடந்தது. வரும் 16ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை 6 வெள்ளிக்கிழமைகளிலும் தேவாலயங்களில் கிறிஸ்து இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுபடுத்தும் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெறும். மார்ச் 24ம் தேதி குருத்து ஞாயிறு தினத்தையொட்டி குருத்தோலைகளை கைகளில் ஏந்தி செல்லும் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி, மார்ச் 28ம் தேதி பாதம் கழுவும் சடங்கு நடைபெறும். 29ம் தேதி இயேசு உயிர்நீத்த புனித வெள்ளி நிகழ்ச்சியை முன்னிட்டு தேவாலயங்களில் புனித சிலுவைப்பாதை மற்றும் திருச்சிலுவை ஆராதனை மற்றும் திருவிருந்து, 30ம்தேதி பாஸ்கா திருவிழிப்பு திருப்பலி நடக்கும். 31ம் தேதி இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் பண்டிகை, சிறப்பு ஆடம்பர பாடல் திருப்பலியுடன்
கொண்டாடப்படும்.
The post சாம்பல் புதன் முன்னிட்டு சிறப்பு திருப்பலி கிறிஸ்தவர்களின் தவக்காலம் துவங்கியது: சர்ச்சில் மக்கள் குவிந்தனர் appeared first on Dinakaran.