பேரணியை தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி: இந்தியாவில் நடக்கக்கூடிய சாலை விபத்துகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது வருத்தத்துக்குரியது. சாலை விபத்துகளில் 19 வயதிலிருந்து 32 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல் ஓட்டுநர்களின் கவனக்குறைவு தான் சாலை விபத்துகளுக்கு மிகப்பெரிய காரணமாக உள்ளது என்று சில ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது. இவற்றையெல்லாம் களைவதற்காகவே இந்த சாலை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த விபத்துக்கள் குறைந்து இருந்தாலும் முற்றிலும் குறைக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சாலை விபத்துகளில் பாதிக்கப்படுபவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக முதல்வர் இன்னுயிர் காப்போம் என்ற மகத்தான திட்டத்தை கொண்டு வந்துள்ளார் இத்திட்டத்தால் உயிர் இழப்புகள் குறைந்துள்ளது. பின்னிருக்கைகளில் ஹெல்மெட் அணியாதவர்கள் குறித்து காவல்துறை தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
The post தமிழ்நாட்டில் சாலை விபத்து தடுக்க தொடர் நடவடிக்கை: அமைச்சர் சிவசங்கர் தகவல் appeared first on Dinakaran.