இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

திருவெறும்பூர், பிப்.13: திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக பிரியா பொறுப்பேற்றுக் கொண்டார். திருவெறும்பூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சந்திரமோகன் அரியலூருக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் பிரியா திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவலர்கள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Related Stories: