தா.பழூர் அருகே முத்துவாஞ்சேரியில் முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் மக்கள் மறியல்

தா.பழூர்,பிப்.11:அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாத்தம்பாடி பஞ்சாயத்து, முத்துவாஞ்சேரி கிராமம் உள்ளது, இங்கு கச்சக்கால் தெருவில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக குழாய்களில் குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் எடுத்துக் கூறியும் நடவடிக்ைக எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை அரியலூர் – முத்துவாஞ்சேரி சாலையில் காலி குடங்களை வைத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விக்கிரமங்கலம் காவல்துறையினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர் .இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

The post தா.பழூர் அருகே முத்துவாஞ்சேரியில் முறையாக குடிநீர் வழங்க கோரி காலி குடங்களுடன் மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Related Stories: