இதேபோல், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த முகமது உசேன் (23) என்ற வாலிபரை சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த முகமது உசேன் இந்த வழக்கு சம்பந்தமாக போக்சோ நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவானார். இதையடுத்து, போக்சோ வழக்கில் தொடர்ந்து தலைமறைவாக உள்ள சரவணன் மற்றும் முகமது உசேன் ஆகிய 2 குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என்று அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, இரண்டு பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில், சரவணன் மற்றும் முகமதுஉசேன் இரவு நேரங்களில் மட்டும் வீட்டிற்கு சென்று விட்டு செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையில் போலீசார் மாறுவேடத்தில் சரவணனை பிடிக்க பாடி குப்பத்தில் உள்ள அவரது வீட்டிற்கும், புளியந்தோப்பில் உள்ள முகமது உசேன் வீட்டிற்கும் போலீசார் சென்று மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது போலீசார் கண்களில் படாமல் மறைமுகமாக வீட்டிற்கு வந்த சரவணன் மற்றும் முகமது உசேனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.
The post 7 மாதமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இரவில் மட்டும் வீடு வந்து சென்ற 2 போக்சோ குற்றவாளிகள் கைது: மாறுவேடத்தில் கண்காணித்து போலீசார் அதிரடி appeared first on Dinakaran.