அரசு போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம்

குமாரபாளையம், பிப்.10: குமாரபாளையம் எஸ்எஸ்எம் கலை அறிவியல் கல்லூரியில், அரசு போட்டித் தேர்வுக்கான கருத்தரங்கு நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை வகித்து கருத்தரங்கை தொடங்கி வைத்தார். கணிதத்துறை தலைவர் பாலுசாமி முன்னிலை வகித்தார். அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கான யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ளும் முறை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. சென்னையிலிருந்து வந்திருந்த பயிற்சியாளர்கள் சிவராஜ் அகாடமி மோகன், மணிவண்ணன் ஆகியோர் பயிற்சியளித்தனர். அகாடமி மேலாளர் இளையராஜா நன்றி கூறினார்.

The post அரசு போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: