ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு

பேரையூர், பிப். 10: பேரையூர் தாலுகா, டி.கல்லுப்பட்டி அருகே நல்லமரம் வீரபக்த ஆஞ்சநேயர் கோயிலில் தை அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி கோமாதாவிற்கு அலங்காரம் செய்யப்பட்டு முன்னோர்களை நினைத்து ஆஞ்சநேயரை வழிபட்டு கோமாதாவிற்கு அகத்தி கீரை, பச்சரிசி, வாழைப்பழங்கள், மண்ட வெல்லம், உள்ளிட்டவைகளை உணவாக கொடுத்து வழிபட்டனர். மேலும் ஆஞ்சநேயருக்கு பால், பழம், தேநீர், குங்குமம், சந்தனம், மஞ்சனம், உள்ளிட்ட 11 விதமான சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை அணிவித்து பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நல்லமரம், கொட்டாணிபட்டி, கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: