ஆனால் நடைபயணம் மேற்கொள்ளாமல் பிரசார வாகனத்தில் அண்ணாமலை சென்று விட்டதால் நன்கொடையாளர்கள் புகைப்படம் எடுக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையில் பாஜ நகர நிர்வாகிகள், நகர தலைவர் சாய் ஆனந்தனிடம் வசூல் செய்த நன்கொடை தொகையை பிரித்து வழங்குமாறு கேட்டுள்ளனர். இதற்கு நகரத்தலைவர் மாவட்டம், மாநில நிர்வாகிகளிடம் பணத்தை ஒப்படைத்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பாஜகவினர் வாட்ஸ் அப் குழு மற்றும் முகநூலில் பணம் வசூல் செய்தது சம்பந்தமாக ஒருவரை ஒருவர் தாக்கி பதிவு செய்து வருகின்றனர். நகைக்கடை அதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்தியது கட்சியினர் மூலமே அம்பலமாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக தலைமை விசாரணை நடத்தி வருகிறது.
The post குடியாதத்ததில் அண்ணாமலை நடைபயணம் நகைக்கடை அதிபர்களிடம் ரூ.20 லட்சம் பாஜவினர் வசூல்: பங்கு பிரிப்பது மோதலால் சமூக வலைதளங்களில் பதிவு appeared first on Dinakaran.