இதுகுறித்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவனைப் பிடித்து விசாரித்தபோது தனது தந்தைதான் நிறுவனத்தில் திருடுமாறு கூறியதாக தெரிவித்தான். இதனையடுத்து போலீசார் சிறுவன் மற்றும் அவனது தந்தையான மதுரவாயலைச் சேர்ந்த ரமேஷ் (51) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.13 ஆயிரம், 3 லேப்டாப் மற்றும் 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post தனியார் நிறுவனத்திற்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது appeared first on Dinakaran.