இந்நிலையில் சமீபகாலமாக உள்ளாட்சி பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. ஊட்டி அருகே நஞ்சநாடு கிராமத்திற்கு செல்லும் சாலையோரத்தில் பிளாஸ்டிக் உள்ளிட்ட அனைத்து வகையான குப்பைகளும் தூக்கி எறியப்பட்டு அப்பகுதியே அசுத்தமாக காட்சியளிப்பதுடன் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை முறையாக அகற்றி தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
The post நஞ்சநாடு பகுதியில் சாலையோரம் வீசி எறியப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.