அழகியமண்டபத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

 

தக்கலை, பிப்.5: குமாரகோவில் என்ஐ கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட முகாம் திருவிதாங்கோடு அரசு மலையாள தொடக்கப் பள்ளியில் நடை பெற்று வருகிறது. நிகழ்வின் தொடர்ச்சியாக அழகியமண்டபத்திலிருந்து தொடங்கி நடுக்கடை ஜங்ஷன் வரை போதைப் பொருள் தடுப்பு பேரணி என்.ஐ கல்லூரி நாட்டு நல பணித்திட்ட மாணவர்கள் சார்பில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்குவோம் மனித மாண்பை காப்போம் என்ற கோஷத்துடன் நடைப்பெற்றது.

நிகழ்வுக்கு எழுத்தாளர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். வழக்கறிஞர் ேஷக் முகமது தலைமை வகித்து தொடங்கி வைத்தார். வார்டு கவுன்சிலர் ஷேக் முகமது, பயோடெக்னாலஜி துறைத் தலைவர் முனைவர் அனுபா, இந்திர குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அணி எண் 138, நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள், மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் சிவகுமார் நிகழ்வை ஒருங்கிணைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் மாரிமுத்து , கல்லூரி தாளாளர் டாக்டர் ஏ.பி மஜீத்கான், கல்லூரி தலைவர் பைசல்கான் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

The post அழகியமண்டபத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: