சிஎம்டிஏ நிர்வாகம்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது

சென்னை : ஐகோர்ட் உத்தரவுப்படி சிஎம்டிஏ நிர்வாகம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. எழும்பூரில் உள்ள சிஎம்டிஏ அலுவலகம் அமைந்துள்ள தாளமுத்து நடராஜன் மாளிகையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, போக்குவரத்துத் துறை ஆணையர் சண்முகசுந்தரம் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. அரசு போக்குவரத்துக் கழக இயக்குநர்கள், பொது மேலாளர்கள், ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

The post சிஎம்டிஏ நிர்வாகம்- ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது appeared first on Dinakaran.

Related Stories: