எர்ணாகுளம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த அசாம் இளைஞருக்கு 82 ஆண்டு சிறை

திருவனந்தபுரம்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் இஷ்புல் இஸ்லாம்(28). கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே பெரும்பாவூரில் கூலித்தொழில் செய்து வந்தார். இவர் கடந்த 2021ம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் குருப்பம்படி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இஷ்புல் இஸ்லாமை கைது செய்தனர். இந்த வழக்கு பெரும்பாவூர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ், இஷ்புல் இஸ்லாமுக்கு 82 வருடம் கடுங்காவல் சிறையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

The post எர்ணாகுளம் அருகே சிறுமியை பலாத்காரம் செய்த அசாம் இளைஞருக்கு 82 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Related Stories: