சித்தார்த் 69 ரன், சுயாஷ் 104 ரன் (192 பந்து, 17 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். மற்றவர்கள் தமிழ்நாட்டு வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் குறைந்த ரன்னில் வெளியேற… கோவா முதல் இன்னிங்சில் 241 ரன்னுக்கு (75.5 ஓவர்) சுருண்டது. தமிழ்நாடு தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 4, அஜித்ராம் 3, சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 20 ரன் எடுத்துள்ளது (7 ஓவர்). சுரேஷ் லோகேஷ்வர் 15, நாராயண் ஜெகதீசன் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று 2வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
The post ரஞ்சி கோப்பை சாய் சுழலில் சுருண்டது கோவா appeared first on Dinakaran.