மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் இறந்தார். இதுகுறித்து பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்தில் இறந்த கல்லூரி மாணவன் லிஜின் சாமினுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். பிறந்த நாளில் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் பணகுடி மற்றும் நதிப்பாறை கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறியழுதது, அங்கிருந்த அனைவரையும் பரிதாபப்பட வைத்தது.
The post பணகுடி அருகே வாகனம் மோதி கல்லூரி மாணவர் பலி: பிறந்தநாளில் இறந்ததால் சோகத்தில் மூழ்கிய கிராமம் appeared first on Dinakaran.