தூத்துக்குடி பொன் சுப்பையா நகரில் கழிவுநீர் கால்வாய் பணி அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்

 

தூத்துக்குடி, பிப். 2: தூத்துக்குடி பொன் சுப்பையா நகரில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்கு உட்பட்ட பொன் சுப்பையா நகரில் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹6 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது.

இதனை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று தொடங்கி வைத்தார். இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவிப்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், போல்பேட்டை பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் ஜெயசீலி, வட்ட செயலாளர் சுரேஷ், வட்ட பிரதிநிதி கருப்பசாமி, சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post தூத்துக்குடி பொன் சுப்பையா நகரில் கழிவுநீர் கால்வாய் பணி அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: