இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பாக வளர்மதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையை வரும் 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதுதொடர்பான வழக்கை வரும் 5ம் தேதி முதல் சென்னை உயர் நீதிமன்றம் தொடர் விசாரணைக்கு எடுக்கவுள்ளதால் உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வளர்மதி தரப்பு வக்கீல் கேட்டுக் கொண்டார். ஆனால், இந்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.
The post வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் அதிமுக மாஜி அமைச்சர் பா.வளர்மதி கோரிக்கை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பு appeared first on Dinakaran.