கடந்த சில நாட்களுக்கு முன், காதலி திருப்பூரில் தங்கி படிப்பதை அறிந்து கொண்டான். உடனே திருப்பூருக்கு சென்ற சிறுவன், மாணவியை கண்டறிந்து மீண்டும் அவருடன் பேசி காதலை வளர்த்துள்ளான். இதனை தொடர்ந்து, கடந்த 4 நாட்களுக்கு முன், மாணவியை தனியாக அழைத்துச் சென்று, இருவரும் ஒன்றாக இருந்துள்ளனர். நெருக்கமாக இருந்த போது, சில வீடியோக்களை சிறுவன் எடுத்துள்ளான். இதனிடையே, சேலத்தில் உள்ள மாணவி தாயின் செல்போனுக்கு, ஒரு வீடியோ வந்தது.
அதில், அவரது மகள், அந்த சிறுவனுடன் நிர்வாணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே இதுகுறித்து அந்த சிறுவனின் பெற்றோரிடம் சிறுமியின் தாய் கேட்டுள்ளார். அப்போது, சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை அடித்து விரட்டியுள்ளனர். இதனால் வேதனையடைந்த அவர், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் அடைப்பதற்கான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.
The post காதலியை பிரித்ததால் ஆத்திரம் மாணவியுடன் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை தாய்க்கு அனுப்பி மிரட்டல்: போக்சோவில் சிறுவன் கைது appeared first on Dinakaran.