பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலை தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் இருந்து பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா, பத்மா சுப்ரமணியத்துக்கு வாழ்த்துகள். பத்ம விருதுக்கு தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை), ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ டி குரூஸ் (இலக்கியம்), சேஷம்பட்டி சிவலிங்கம் (கலை), நாச்சியார் (மருத்துவம்) ஆகியோருக்கும் வாழ்த்துகள். தமிழ்நாட்டில் பிறந்து பப்புவா நியூ கினியில் ஆளுநர் பொறுப்பு வரை உயர்ந்த சசீந்திரன் முத்துவேல், அந்தமானை சேர்ந்த இயற்கை விவசாயியான செல்லம்மாள் ஆகியோரையும் பத்ம விருது பெறுவதற்காக தமிழனாகப் பாராட்டி மகிழ்கிறேன். அண்மையில் மறைந்த எனது நண்பர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவித்தமைக்காக நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

The post பத்ம விருதுக்கு தேர்வானவர்களுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: