திருவனந்தபுரம்: 120 ஆண்டு பழமையான முல்லைப்பெரியாறு அணைக்கு பதில் புதிய அணை கட்ட அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. புதிய அணை கட்டுவதன் மூலமே லட்சக்கணக்கான கேரள மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும். முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது ஒன்றே பிரச்சனைக்கு தீர்வாகும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.