நெல்லையில் டாக்டர் தமிழ்ஸ் ஏ பிளஸ் ஸ்கின் ஹேர் மையம்

தூத்துக்குடி, ஜன.24: நெல்லை வண்ணார் பேட்டையில் டாக்டர் தமிழ்ஸ் ஏ பிளஸ் ஸ்கின் ஹேர் மையத்தை இன்று (24ம்தேதி) முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைக்கிறார். நெல்லை வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் ரோட்டில் (ஆப்பிள் ட்ரீ ஹோட்டல் அருகில்) டாக்டர் தமிழ்ஸ் ஏ பிளஸ் ஸ்கின் ஹேர் மற்றும் லேசர் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று (24ம்தேதி) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் திறந்து வைக்கிறார். திறப்பு விழாவை முன்னிட்டு இலவச ஹேர் ஹெல்த் முகாம் மற்றும் பரிசோதனை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை டாக்டர் தமிழரசி சண்முகநாதன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

The post நெல்லையில் டாக்டர் தமிழ்ஸ் ஏ பிளஸ் ஸ்கின் ஹேர் மையம் appeared first on Dinakaran.

Related Stories: