நெசவாளர்களுக்கு மானியம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் 3 லட்சம் கைத்தறிகள் மூலம் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உள்ளது. கூட்டுறவு சங்கத்தில் ரூ.100 கோடிக்கு மேல் பட்டு சேலைகள் தேக்கமடைந்துள்ளதால் அதற்கு கைத்தறித்துறை 35 சதவீத தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும்.பட்டு சேலை உற்பத்திக்கு மூலப் பொருள் விலை உயர்ந்திருப்பதால், பட்டு சேலைகளின் விலை குறைவதற்கும், நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் ஏதுவாக தமிழக அரசு உச்சவரம்பின்றி 20% தள்ளுபடி மானியம் வழங்க வேண்டும்.

The post நெசவாளர்களுக்கு மானியம் வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: