அதிரடியாக விளையாடி எதிரணியை எதிர்கொள்வதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டை இப்படியும் ஒரு வழியில் விளையாடலாம் என்று உலகத்திற்கு அவர்கள் காட்டுகிறார்கள். ஆனால் ஒரு பவுலராக டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் போது நாங்களும் போட்டியில் இருப்போம். பேட்ஸ்மேன்கள் எனது பந்துவீச்சை அதிரடியாக ஆடும் போது நிச்சயம் அவர்கள் என்னை தொய்வுபடுத்த முடியாது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நாங்களும் விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்வோம். இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக ஆடினால் அதனை எப்படி எனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என்பதை மட்டும் தான் நான் யோசிப்பேன். அதிரடியாக விளையாடுவதற்கு அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஒரு பவுலராக நீங்கள் எப்போதுமே போட்டியில் இருப்பீர்கள்.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது எப்போதுமே சிறந்த ஒன்று. அதிலும் கேப்டனாக அணியை வழிநடத்துவது மிகவும் சிறந்த ஒன்று. நான் கேப்டன் பொறுப்பேற்ற போட்டியில் நாங்கள் தோல்வியை தழுவினாலும் எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன். ஆஸ்திரேலியாவில் பேட் கம்மின்ஸ் வேகப்பந்துவீச்சாளராக இருந்து கொண்டு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் புத்திசாலித்தனமான வீரர்கள். அவர்கள் கடினமான வேலையை பார்க்கிறார்கள். போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்களுக்கு நிச்சயம் தெரியும். இவ்வாறு பும்ரா கூறியுள்ளார்.
The post இங்கிலாந்தின் அதிரடியை எதிர்கொள்ள தயார்: பும்ரா பேட்டி appeared first on Dinakaran.